Sunday, 13 October 2013

God belief

ஒரு தேவாலயத்துக்கு அருகில் ஒரு மதுபானக் கடை திறக்கப்பட்டது. தேவாலயத்தில் தினமும்


அதன் வியாபாரத்திற்கு எதிராய் பிரார்த்தனை நடத்தப்பட்டது. 

ஒரு நாள் மின்னல் தாக்கி அந்த மதுபானக் கடை முற்றிலும் எரிந்து சாம்பலானது. கடையின் 

உரிமையாளர் அவர்களது பிரார்த்தனையால் தான் தன் கடை எரிந்து நாசமானது என்று கூறி 

பாதிரியார்களுக்கு எதிராய் வழக்கு தொடர்ந்தார். 

பாதிரியார்கள் இதை முற்றாக மறுத்தார்கள். 

அப்போது நீதிபதி சொன்னார் - "இது மிகவும் சிக்கலான வழக்கு. மதுபானக் கடை உரிமையாளர் 

பிரார்த்தனையின் சக்தியை நம்புகிறார்.....ஆனால் மத நம்பிக்கையுள்ள தேவாலயமோ இதை 

அடியோடு மறுக்கிறது. எனவே தீர்ப்பளிப்பது கடினம்" என்று.

1 comment: